இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


214 திருக்கோயில்களுக்கு அறங்காவலர் நியமனம்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இதுவரை துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 9,205 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதில் சட்டப்பிரிவு 46(iii)-ன் கீழ் வரும் 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிக்க கடந்த 14.06.2026 அன்று நாளிதழ்கள் மற்றும் இணையதளத்தில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இதற்காக விண்ணப்பிக்க 22.07.2026 (இன்று) மாலை 5.45 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 12 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
விண்ணப்ப அவகாசம் நிறைவடையும் நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அதிகப்படியான தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கும் வகையில் இந்த அவகாசம் 12.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய கடைசி நாள்: 12.08.2026 (மாலை 5.45 மணி வரை)
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுடைய நபர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தைப் பூர்த்தி செய்து இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யலாம் அல்லது நேரில் / அஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
இதுவரை விண்ணப்பிக்காத விருப்பமுள்ள பக்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
