- Advertisement -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (8.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையின்போது, எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


அமைச்சர்கள் மற்றும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்:
பெருநகர சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களுக்கும், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள ஏதுவாக, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி (IAS) அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
