காணும் பொங்கலையொட்டி, சென்னையில் 15,500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். பெருநகர சென்னை காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் ‘சீமான்’… டக்கரான அப்டேட்!
மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிகக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
பொதுமக்கள் கடலில் குளிப்பதைத் தடுக்க கடற்கரையோரம் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. 200- க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் மெரினாவில் தயார் நிலையில் உள்ளனர். இருசக்கர வாகன பந்தயத்தைத் தடுக்கக் கண்காணிப்பு சோதனை குழுக்கள் அமைக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் ‘சைரன்’…. ரிலீஸ் எப்போது?
இதனிடையே, சென்னையில் விடுப்பில் உள்ள காவலர்களின் விடுப்பை ரத்துச் செய்து இன்று (ஜன.17) பணிக்கு வர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். காணும் பொங்கலை முன்னிட்டு முக்கிய இடங்களுக்கு பொதுமக்கள் அதிகளவில் வருவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.