Homeசெய்திகள்தமிழ்நாடு'மக்களவைத் தேர்தல் 2024'- வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்....வேட்பாளர்களின் கவனத்திற்கு!

‘மக்களவைத் தேர்தல் 2024’- வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடக்கம்….வேட்பாளர்களின் கவனத்திற்கு!

-

- Advertisement -

 

வயநாடு தொகுதியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தம்!
File Photo

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 20) தொடங்குகிறது.

பிரதமர் தனது தகுதிக்கு ஏற்றவாறு பேச வேண்டும் – டி.ஆர். பாலு பதிலடி!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் முழு வீச்சில் செய்து வருகின்றனர். இதற்கிடையே, தொகுதிப் பங்கீட்டை நிறைவுச் செய்து வேட்பாளர்களை இறுதிச் செய்யும் பணிகளில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (மார்ச் 20) காலை 10.00 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. வரும் மார்ச் 27- ஆம் தேதி வரை வேட்பு மனுத்தாக்கல் நடைபெறும் என்றும், அந்தந்த தொகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலகங்களுக்கு சென்று வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கல் செய்யப்படும் வேட்பு மனுக்கள் வரும் மார்ச் 28- ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்றும், வேட்பு மனுக்களை வரும் மார்ச் 30- ஆம் தேதிக்குள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை மட்டுமே வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய முடியும். வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மக்களவை முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய மாலை 03.00 மணிக்கு பின் வந்தால், அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை. வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி பதிவாகும் வாக்குகள், ஜூன் 04- ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

MUST READ