Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

-

 

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை!

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் வாகனத்தை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

குமரியில் கடத்தப்பட்ட 17 வயது சிறுமி ஒசூரில் மீட்பு – இளைஞர் போக்சோவில் கைது!

மக்களவைத் தேர்தலையொட்டி, பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் நோக்கத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வாகனங்களை மறித்து சோதனையிட்டு வருகின்றனர். அண்மையில் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோரது வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த வகையில், தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காரிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.

“மீனவர்கள் விவகாரம் முதல் வேலை வாய்ப்பு வரை”- பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி அடுக்கடுக்கான கேள்வி!

அவர் நெல்லை தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பணகுடிக்கு பரப்புரை மேற்கொள்ள தனது காரில் சென்றுக் கொண்டிருந்த போது, இந்த சோதனை நடத்தப்பட்டது. 35 நிமிடங்கள் நடைபெற்ற சோதனையில் பணம் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் சிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ