spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

-

- Advertisement -

சென்னையில் பணியின்போது உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின்
குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

'மத்திய அரசு நிதி பாகுபாடு'- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

we-r-hiring

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவிபாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த ஜெகன்குமார், பயணி ஒருவருடன் ஏற்பட்ட
வாய்தகராறின்போது அப்பயணி தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
24.10.2024 இரவு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியறிந்து மிகுந்த
வருத்தமும் வேதனையும் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த அரசு மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் குமார்
குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.மேலும், உயிரிழந்த நடத்துநர் ஜெகன்குமார் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் முதலமைச்சரின் பொது
நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MUST READ