கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளுக்கும் நடைபெற இருக்கும் தேர்வுகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.