

குறுவைச் சாகுபடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35,000 ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட வேண்டுமென அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை – வானிலை மையம் அறிவிப்பு..
தென்மேற்கு பருவமழை பொய்த்த மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வலியுறுத்தி, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நிர்வாகத் திறனற்ற காரணத்தால் தான், தி.மு.க. அரசு ஜூன் 12- ஆம் தேதியே மேட்டூரில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரைத் திறந்ததாகக் குற்றம் சாட்டினார். எரியும் நெருப்பை பெட்ரோல் ஊற்றி எரியச் செய்வது போல, விவசாயிகளின் வாழ்வில் முதலமைச்சர் மண்ணை அள்ளிப் போட்டிருக்கிறார் என கடுமையாக விமர்சித்துள்ளார்.
வகுப்பறையில் மயங்கிவிழுந்து ஆசிரியை மரணம்
மக்களை வஞ்சிப்பதையே தொழிலாகக் கொண்ட தி.மு.க. அரசு, தமிழகத்திற்கு குறுவைப் பருவத்தில் காப்பீடு தேவையில்லை என கடந்த ஜூன் மாதம் தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாகப் பதிவிட்டுள்ளார். சம்பா பயிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள காப்பீட்டுத் தொகையை மறு கணக்கீடு செய்யவும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.