தமிழக தலைம தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். இதில் அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் ஆண்கள் 3.03 கோடி வாக்காளர்களும், பெண்கள் 3.14 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 8294 வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் அதிகபட்ச வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூரில் 6,60,419 பேரும், இரண்டாவதாக கோவை கவுண்டம்பாளையம் 4,62,612 வாக்காளர்களை கொண்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலை விட தற்போது கூடுதலாக 7 லட்சம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் 13.61 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்த்துள்ளனர். மேலும், 6.02 லட்சம் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 3.23 லட்சம் வாக்களர்கள் திருத்தம் செய்துள்ளதாக கூறினார்.