spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

-

- Advertisement -

வளர்பிறை முகூர்த்தம், தை பூசம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பொங்கல் கொண்டாட ரெடியா மக்களே!! சென்னையில் இருந்து 14,104 சிறப்பு பேருந்துகள்..

we-r-hiring

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாளை, நாளை மறுதினம் மற்றும் வரு ஞாயிற்றுக் கிழமை வார விடுமுறை நாட்கள், முகூர்த்தம் மற்றும் தைபூசம் முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற தீர்ப்பின்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் - தொழிற்சங்க கூட்டமைப்பு

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 380 பேருந்துகளும், நாளை மறுநாள் 530 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளையும், நாளை மறுநாளும் தலா 60 பேருந்துகள் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 250 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து நாளையும், நாளை மறுநாளும் தலா 20 பேருந்துகளும் 20 பேருந்துகளும், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது .

இந்நிலையில், இந்த வார இறுதியில் நாளை 11,336 பயணிகளும், நாளை மறுநாள் 634 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8,864 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.  இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், இவ்வவாறு அவர் தெரிவித்தார்.

MUST READ