Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

-

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

nagapatnam

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறை துறையில் இருந்து நேற்று மதியம் 50க்கும் மேற்பட்ட படகுகளில் ஆறுக்காட்டுதுறையில் இருந்து 22 நாட்டிகள் மைல் தொலைவில் மீனவர்கள், நேற்று இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடல் கொள்ளையர்கள் 5 பைபர் படகில் 15க்கும் மேற்பட்டவர்கள் ஆற்காட்டுதுறை சேர்ந்த 4 விசைப்படகுகள் மற்றும் ஒரு பைபர் படகை அடுத்தடுத்து வழி மறித்து தாக்கி அவர்களது படகில் ஏறி கத்தி, கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்களை தாக்கி படகில் இருந்த மீன்பிடி வலைகள் , திசை காட்டும் கருவி, பேட்டரிகள், வாக்கி டாக்கி மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக வெறும் கையுடன் அவசரமாக அவசரமாக ஆற்காட்டுதுறை கடற்கரைக்கு நள்ளிரவு வந்து சேர்ந்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியதில் பாஸ்கர் , அருள்ராஜ், சுப்பிரமணியன் வெற்றிவேல் ஆகிய 4 மீனவர்களுக்கு தலையில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டு 20க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளது. இதில் இரண்டு நபர்கள் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். செந்தில்அரசன், மருது ,வினோத் ஆகிய மூன்று மீனவர்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேதாரண்யம் அடுத்த வெள்ளபள்ளம் மீனவ கிராமத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற பைபர் படகையும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி பொருட்களை பரிந்து சென்றுள்ளனர். இதில் அருள்செல்வம் என்பவருக்கு காயம் ஏற்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரே இரவில் 6 படகுகளை வழிமறித்து இலங்கை கடல் கொள்ளையர்கள் 8 மீனவர்களை தாக்கி 10 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்து சென்ற சம்பவம் வேதாரண்யம் மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

MUST READ