Homeசெய்திகள்தமிழ்நாடு"போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!" - சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. 'கோஷ்டி மோதல்' என...

“போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!” – சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. ‘கோஷ்டி மோதல்’ என மழுப்பிய அமைச்சர்? பேரவையில் பெரும் பரபரப்பு!

-

- Advertisement -

கோவையில் போதைப்பொருள் விற்பனை குறித்துப் காவல் துறையில் புகாரளித்த மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம், தமிழகச் சட்டமன்றத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த விளக்கத்திற்குத் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்."போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!" - சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. 'கோஷ்டி மோதல்' என மழுப்பிய அமைச்சர்? பேரவையில் பெரும் பரபரப்பு!

அரசு பொறுப்பேற்க வேண்டும்: உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்
சட்டமன்றத்தில் இச்சம்பவம் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை எழுப்பிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், மாநிலத்தில் சீர்கெட்டு வரும் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்துக் காரசாரமாகப் பேசினார்.

we-r-hiring

எதிர்க்கட்சித் தலைவர் பேச்சு
“கோவையில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவது குறித்துத் துணிச்சலாகக் காவல்துறையிடம் தகவல் அளித்த மாணவர் அமுதன், கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். போதைப்பொருள் கும்பலின் இந்த அத்துமீறலுக்கு இந்த அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும். மேலும், மாணவரின் படுகொலை குறித்துச் சட்டமன்றத்தில் உரிய விளக்கமளிக்க வேண்டும்.”"போதைப்பொருள் புகாரால் மாணவர் அமுதன் படுகொலை!" - சட்டமன்றத்தில் சீறிய உதயநிதி.. 'கோஷ்டி மோதல்' என மழுப்பிய அமைச்சர்? பேரவையில் பெரும் பரபரப்பு!

‘கோஷ்டி மோதலே காரணம்’ – அமைச்சர் ராஜ்மோகன் மறுப்பு
எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், போதைப்பொருள் விவகாரத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்ற ரீதியில் விளக்கமளித்தார்.

அமைச்சரின் விளக்கம்
“சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே ஏற்கனவே நீடித்து வந்த ‘கோஷ்டி மோதல்’ காரணமாகவே இந்த மோதல் சம்பவமும், அதனைத் தொடர்ந்த அசம்பாவிதமும் நடந்துள்ளது.”

பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கூச்சல் – சலசலப்பு
மாணவர் அமுதன் கொல்லப்பட்டதற்குப் போதைப்பொருள் புகாரே முக்கியக் காரணம் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அமைச்சரின் “கோஷ்டி மோதல்” என்ற விளக்கத்தை ஏற்க மறுத்துத் தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று தங்களது பலத்த எதிர்ப்பைப் தெரிவித்தனர். அமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால் சட்டமன்ற வளாகத்தில் சில நிமிடங்கள் பெரும் சலசலப்பும் பரபரப்பும் நிலவியது.

“தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது”: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச உரை!

MUST READ