spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு

-

- Advertisement -

685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து தற்போது கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுனர் பணி இடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் உள்ள ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணி இடங்களையும் நிரப்புவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

we-r-hiring

அதன்படி கும்பகோணம் போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 203 காலி பணியிடங்களில் 122 ஓட்டுனர் பணியிடங்களையும், அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மொத்தம் உள்ள 800 காலி பணியிடங்களில் 685 காலி பணியிடங்களை ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை கொண்டு நிரப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிக்கான, கல்வி தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக போக்குவரத்து வாகனத்தை இயக்குவதற்கான ஓட்டுனர் உரிமம்(லைசென்சு) , முதலுதவி சான்றிதழ் ஆகியவை பெற்றிருக்க வேண்டும்.

இதர வகுப்பினர் 24 வயது முதல் 40 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனங்களை ஓட்டிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உயரம் 160 செ.மீ. குறையாமலும், எடை குறைந்தப்பட்சம் 50 கிலோவாகவும், கண் பார்வை தெளிவு உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். ஓட்டுனர்களுக்கான சம்பளம் ரூ.17 ஆயிரத்து 700- லிருந்து ரூ.56 ஆயிரத்து 200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனர் மற்றும் நடத்துனர் 2 பணிகளை சேர்த்து செய்பவர்களுக்கும் இதே அளவில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர்கள் தலைமையில் தேர்வு குழு நியமிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ