Homeசெய்திகள்தமிழ்நாடுவரும் 8-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

வரும் 8-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

-

வரும் 8-ம் தேதி நாகை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் கடைசி நாளான வரும் 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா- நாளை கொடியேற்றம்

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயஆண்டு திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவையொட்டி தமிழக மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள்குவிந்துள்ளனர். குறிப்பாக மாதா சொரூபம் தாங்கிய வாகனத்தில் மரியே வாழ்க முழக்கமிட்டு மாதா புகழ் பாடியபடியும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, விழுப்புரம், கடலூர் ,சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும்பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வேளாங்கண்ணியிலுள்ளதங்கும் விடுதிகள் முன்பதிவு செய்யும் இடம், பேருந்து நிலையம், உணவகங்கள்,கடைவீதி ஆகியன அனைத்தும்நிரம்பி வழிகிறது. விழாவை முன்னிட்டு பல்வேறு தற்காலிக கழிவறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளோடு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளநிலையில், வேளாங்கண்ணியே விழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் வேளாங்கண்ணி பேராலய திருவிழாவின் கடைசி நாளான வரும் 8ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு ஈடாக வரும் 23ம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

MUST READ