Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு 

-

- Advertisement -

திமுக – விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மது ஒழிப்பு மாநாட்டில் ஜாதி, மதவாத சக்திகளைத் தவிர அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
பின்னர் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்குவது தொடா்பாக அவா் பேசிய வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.  இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  திருமாவளவன் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி அக். 2-ஆம் தேதி நடந்தும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சருக்கு, திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.

விசிக தலைவர் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,
முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப் பயணத்துக்கான வாழ்த்துகளையும்
பாராட்டுகளையும் அவரிடம் தெரிவித்ததாகவும், பல ஆயிரம் கோடி
முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி
வரலாற்றுச் சிறப்புமிக்க பயணமாக முதலமைச்சரின் பயணம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், விடுதலை சிறுத்தைகள் நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பை முதலமைச்சருக்கு வழங்கியதாகவும், இந்த மாநாட்டில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே .எஸ்.இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று முதலமைச்சர் கூறியதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தும் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக கூறிய திருமாவளவன, திமுக – விசிக கூட்டணியில் எந்தவித விரிசலும் இல்லை என்றும், ஊடகஙகள் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்றும் கேட்டுகொண்டார்.

MUST READ