
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 07- ஆம் தேதி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

“சந்திரபாபு நாயுடுவின் மனைவி நடத்தும் பேருந்து யாத்திரை குறித்து அமைச்சர் ரோஜா விமர்சனம்”!
இது தொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் காலியாக உள்ள 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு வரும் ஜனவரி 07- ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு வரும் நவம்பர் 01- ஆம் தேதி முதல் நவம்பர் 30- ஆம் தேதி வரை https://trb.tn.nic.in/ என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் தேர்ச்சிப் பெற்றவர்கள் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். பட்டப்படிப்பு மற்றும் பி.எட் படிப்பில் 50% பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆளுநர் மாளிகை வாசலில் என்ன நடந்தது?”- காவல்துறை விளக்கம்!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற ஆண்டுக்கு ஏற்ப வெயிட்டேஜ் மதிப்பெண்களும் வழங்கப்படவுள்ளன. கடந்த 2014- 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.