spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம்

-

- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு இயல்பாக சுவாசிக்கிறார்.

senthilbalaji

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக, சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவருக்கு இதயத்தில் மூன்று நாளங்களில் அடைப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அமைச்சருக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சையை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைச் செய்தனர்.

we-r-hiring

senthil bal

இதையடுத்து செந்தில்பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளை ஏற்று, சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடந்த 21 ஆம் தேதி காலை 05.15 மணிக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. 2 நாட்களாக செந்தில்பாலாஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நினைவுடன் இருக்கிறார் எனவும் அவரால் உட்காரவும், பேசவும் முடிகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் அகற்றபட்டதாகவும், திரவ உணவுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி உட்கொள்ளத் தொடங்கியுள்ளார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ