Homeசெய்திகள்தமிழ்நாடுவிஜயலட்சுமி விவகாரம்- 12ம் தேதி ஆஜராகிறார் சீமான்

விஜயலட்சுமி விவகாரம்- 12ம் தேதி ஆஜராகிறார் சீமான்

-

விஜயலட்சுமி விவகாரம்- 12ம் தேதி ஆஜராகிறார் சீமான்

விஜயலட்சுமி புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 12 ஆம் தேதி சீமான் ஆஜராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2011ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம், மோசடி, பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சீமான் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் இவ்வழக்கில் சீமானை போலீசார் கைது செய்யவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமானை கைது செய்ய வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நடிகை விஜயலட்சுமியை கோயம்பேடு துணை ஆணையர் உமையாள் தலைமையிலான போலீசார் இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். பின்னர் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் மாஜிஸ்ட்ரேட் வாக்குமூலம் பெற்றார்.

நடிகை விஜயலட்சுமி

6 முறை சீமான் கட்டாயத்தின் பேரில் கருக்கலைப்பு செய்ததாக நடிகை விஜயலட்சுமி புகாரில் தெரிவித்த நிலையில், நடிகை விஜயலட்சுமியிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜராகி விளக்கமளிக்க சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈரோடு செல்ல உள்ளதால், விஜயலட்சுமி புகாரில் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் 12 ஆம் தேதி சீமான் ஆஜராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ