spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுவியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியபாரிகளிடம் நூதன மோசடி..

-

- Advertisement -

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை கியூ.ஆர் கோடு முறையில் வியாபாரிகளிடம் நூதன மோசடி..

இணையதள குற்றங்கள் பல நடைப்பெற்றுவரும் நிலையில் இப்போது புதிய முறையில் மோசடி ஆரம்பமாகியுள்ளது எனவே வியாபாரிகள் எச்சரிக்கையாக இருக்க காவல்துறை  அறிவித்துள்ளது.

we-r-hiring

இது ராணுவவீரரின் போர்வையில் நடக்ககூடிய ஒரு குற்றமாக உள்ளது.பொதுவாக மிலிட்ரி ஜவான் என்ற முறையில் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு தன்னுடைய ஐடி மற்றும் போட்டோ காண்பித்து வியாபாரிகளிடம் தனக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவதன் மூலமே மோசடி தொடங்குகிறது.அதாவது பர்னீச்சர்,எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,போன்ற வியாபாரிகளிடமே அதிகளவு நடைபெறுகிறது.

ராணுவவீரரின் போர்வையில் பொருட்களை ஆர்டர் செய்து பொருட்களுக்கான ரொக்கத்தை ஏதாவது ஒரு ஓட்டலுக்கு வாருங்கள் தருகிறோம் என்றும்,எங்களுடைய கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யுங்கள் என்றும் அனுப்பி விடுவார்கள். அப்படி ஸ்கேன் செய்யும் போது வியபாரியின் ரொக்கத்தை டைப் பண்ணும் போதே வியாபாரியின் கணக்கில் இருக்கும் பணத்தை தங்களுடைய அக்கவுண்டிற்கு மாற்றி கொண்டு பணத்தை அனுப்புவதாக சொல்லி செல்போனை ஆஃப் செய்துவிட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

மதுரை,விருதுநகர்,போன்ற பெரும் நகரங்களில் இப்போது இந்த மோசடி நடைபெற்றுவருகிறது.ராணுவவீரர் என்று சொல்லிக் கொண்டு பொருட்களை ஆன் லைனில் வாங்க வருபவர்களிடம் வியாபாரிகள் உஷாராக இருக்க வேண்டும் என காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சைபர் கிரைம் நடைபெறுவதை  ஒன்றாக சேர்ந்து தடுப்போம் ! வளமோடு வாழ்வோம்!!.

 

MUST READ