spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

“தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவிற்கு இல்லை”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

-

- Advertisement -

 

Duraimurugan

we-r-hiring

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு, இன்று (செப்.19) காலை 09.00 மணிக்கு டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு படி, காவிரியில் இருந்து தண்ணீரைத் திறந்து விட கர்நாடகா அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. அத்துடன், கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கியது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு!

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தமிழகத்திற்கு தண்ணீர் தரும் எண்ணம் கர்நாடகாவுக்கு துளியும் இல்லை. கர்நாடகாவிடம் போதுமான தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு தர மறுக்கிறது. உத்தரவுகளை கர்நாடகா முறையாகச் செயல்படுத்தவில்லை என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் முறையிட்டோம்.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!

ஒழுங்காற்றுக் குழு, மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ