Homeசெய்திகள்உலகம்மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!

-

- Advertisement -

 

மொராக்கோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000 உயர்வு!
File Photo

மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,000- ஐ கடந்துள்ளது.

“அவர் ஊழலற்ற மாமனிதர்”- சந்திரபாபு நாயுடு கைதுக்கு பவன் கல்யாண் கண்டனம்!

மொராக்கோ நாட்டின் மராகேஷ் மாகாணத்தின் தென்மேற்கில் அயார்ட்பிளஸ் மலைப்பகுதியில் உள்ள இகில் என்ற இடத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 18 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் 6.8 ரிக்டர் அளவில், அடுத்து 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதோடு, தொடர்ச்சியான நில அதிர்வுகளும் ஏற்பட்டுள்ளன.

இதில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. சாலைகளில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் மீது சுவர்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000- ஐ கடந்துள்ளது. 1,400- க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைத் தொடக்க நிலையில் தான் உள்ளது”- குமாரசாமி பேட்டி!

பலரின் உடல்நிலைக் கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

MUST READ