- Advertisement -
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத்தலைவர் த.வெள்ளையன் உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத்தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை அமிஞ்சிக்கரையில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

த.வெள்ளையனின் உடல்நிலையை நிபுணர்கள் கொண்ட குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் ஆதரவான சிகிச்சையுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.