- Advertisement -
பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 10 ஆம் தேதிக்கு நடைபெற்ற ரயில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது.
கன்னியாகுமரி விரைவு ரயில், நெல்லை விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், உள்ளிட்ட விரைவு ரயில்களிலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
120 நாள்களுக்கு முன்பே முன்பதிவு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜனவரி 10ம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
டிக்கெட் முன்பதிவு தகவலை அறிந்து உடனடியாக ஆன்லைனிலும், டிக்கெட் மையங்களிலும் திரண்டு வந்து ஏராளமானோர் விரைந்து முன்பதிவு செய்தனர்.