Homeசெய்திகள்தமிழில் வேரூன்றி நிற்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழில் வேரூன்றி நிற்க வேண்டும் – தமிழச்சி தங்கபாண்டியன்

-

- Advertisement -

பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டாலும் தமிழ் மொழியில் வேரூன்றி நிற்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மாணவிகளிடையே உரையாற்றினார்.

திண்டுக்கல்லில் ஜிடிஎன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் திமுக நாடாளுமன்ற எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பங்கேற்று மாணவிகளிடம் உரையாற்றினார்.

தமிழில் வேரூன்றி நிற்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்

அப்போது பேசிய அவர், பெண் சிங்கங்கள் தான் எப்போதும் வேட்டையாடி உணவை கொண்டு வந்து ஆண் சிங்கங்களிடம் தரும் என்று பேசினார். எனவே பெண்களின் தைரியத்தை போற்றும் போது அவர்களை பெண் சிங்கம் என்று கூற வேண்டும் என உத்வேதகத்துடன் பேசினார்.

மேலும், பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் முத்துலட்சுமி அம்மையார் என்றும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் கடுமையாக போராடினார் என்றும் தமிழச்சி பெருமிதம் தெரிவித்தார். அவரைப் போலவே மாணவிகள் தங்கள் சுதந்திரத்திற்காகவும் தங்கள் திறமைகளை வெளிக்கொணரவும் போராட வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.

தமிழில் வேரூன்றி நிற்க வேண்டும் - தமிழச்சி தங்கபாண்டியன்

பல்வேறு மொழிகளை கற்றுக் கொண்டாலும் தமிழ் மொழியில் வேரூன்றி நிற்க வேண்டும் என்றும் மாணவிகளுக்கு அவர் அறிவுரை கூறினார்.

MUST READ