spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னையில் 8 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,360 அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு நாட்டில் தங்கத்தின் தேவை 4,741 டன்களாக அதிகரித்தது கடந்த ஆண்டுதான். விழாக்காலமான அக்டோபர்- டிசம்பர் காலாண்டில் தங்க விற்பனை அதிகரித்ததும் ஆர்பிஐ கொள்முதலில் இறங்கியதுமே தங்கத்தின் தேவை அதிகரித்ததற்கு காரணம் என தெரிகிறது.

we-r-hiring

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.43,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து ரூ.5,450-க்கு விற்கப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.10- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.400 உயர்ந்து 73,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்ஜெட் எதிரொலியாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தங்கம், வெள்ளி, வைரம் மீதான சுங்கவரியை உயர்த்தி ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தங்கம் சவரன் 43 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

MUST READ