சூர்யா 45 படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா கங்குவா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் சூர்யா, ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அதன்படி தற்காலிகமாக சூர்யா 45 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜை உடன் தொடங்கப்பட்டு தற்போது கோயம்புத்தூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை திரிஷா, வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் நடிகை சுவாசிகா ஆகியோரும் சூர்யா 45 படத்தில் இணைந்துள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அடுத்தது ஆரம்பத்தில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான போது ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் ஏ ஆர் ரகுமானின் படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக சாய் அபியங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். ஜி கே விஷ்ணு இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க இருக்கிறார். இந்த படமானது ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தினை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அடுத்த ஆண்டில் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரிலீஸாக உள்ள தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.