நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பாஜகவில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் பதிவு.
நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தயா சங்கர் என்பவர் இருந்து வருகிறார் மாவட்ட பொது செயலாளர்களில் ஒருவராக வேல் ஆறுமுகம் என்பவர் இருந்து வருகிறார் இவர்கள் இருவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பாரதிய ஜனதா கட்சியில் தங்களது அரசியல் பயணம் நிறைவடைந்தது என்னுடன் பயணித்து அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நன்றி என தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் கட்சியில் இருந்து விலகப் போவதாக தங்களது அறிவிப்புகளை ஒருசேர வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நிர்வாகிகள் கருத்துக்கணிப்பு கூட்டம் நடத்தப்பட்டது அந்த கருத்து கேட்ப கூட்டத்தில் மாவட்ட தலைவராக போட்டியிடுவதற்கு தங்களது விருப்பத்தை சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் தெரிவித்துள்ளனர் .இந்த சூழலில் கட்சியின் தலைமை அதில் மூன்று பேருக்கு வாய்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் விருப்பமான பெறும் பணி நடந்த சூழலில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது பாஜக மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.