எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்து, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள் நிதி பெற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் அஜித்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவரது மனுவிக்லல்,”இன்று தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பி இருக்கும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ் இனத்தின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் எடிட்டிங் செய்யப்பட்டது என சினிமா இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பிரபாகரனின் பெயரை கூறி கட்சி நடத்தி வரும் சீமான், பல இலட்சம் இளைஞர்களின் தமிழ் உணர்வை தூண்டி தவறான பாதையில் அழைத்துச் சென்று
கொண்டு இருக்கிறார்.

பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்துள்ளார். ஆக பல ஆண்டுகளாக சமூக வலை தளங்களில் பொய்யான புகைப்படங்களை வெளியிட்டு கோடி கணக்கான தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தி இருக்கிறார்கள். இந்த புகைப்பட மோசடி மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி பல கோடிகளை திரள் நிதி திரட்டி அரசியல் பிழைப்பு நடத்தி வருகிறார்.
ஆகவே எடிட் செய்யப்பட்ட போலியான புகைப்படத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டு வாழ் தமிழர்களையும், இலங்கைத் தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும், ஏமாற்றி பல கோடி ரூபாய் திரள்நிதி பெற்று பிழைப்பு நடத்தி வரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்தும் அந்த போலியான புகைப்படத்தை உருவாக்கி கொடுத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், செங்கோட்டையன் என்ற நபர்கள் மீது நடவடிக்கை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.