Homeசெய்திகள்கட்டுரைஅடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

அடி மேல் அடி! அலறும் அமித்ஷா! ஷ்யாம் சுட்டிக்காட்டிய சம்பவம்!

-

- Advertisement -

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் காரணமாக அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து  முயற்சிகளும் மேற்கொள்வதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

tharasu shyam
tharasu shyam

தமிழ்நாடு அரசின் மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிரான விமர்சனங்களுக்கு பதில் அளித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது :- மாநில சுயாட்சி தீர்மானம் என்பது வெறும் அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டதோ, தேர்தலுக்காக செய்யப்பட்டதோ கிடையாது. இது பெரிய ஆவணமாகும். இந்த ஆவணம் பிற்காலத்தில் பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்புரைகளில் மேற்கோள் காட்டப்படும். அம்பேத்கரின் புகழ்பெற்ற வாக்கியத்ததை இன்றைக்கு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மேற்கோள் காட்டுகின்றனர். இதில் அரசியல் நோக்கம் இருக்கலாம். ஆனால் ராஜமன்னார் குழு பரிந்துரைகள் இன்றைக்கும் இந்தியா போன்ற தேசங்களின் தேசத்தில் டெல்லிக்கும், கடைக்கோடி மாநிலமான தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிற ஒரு ஆவணமாக இன்றைக்கும் உள்ளது. இது தவிர தேசிய அளவில் தமிழ்நாட்டின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை. உதாரணமாக ஆளுநர் Vs தமிழ்நாடு அரசுக்கு எதிரான வழக்கு மத்திய அரசுக்கு நிச்சயம் பிடித்திருக்காது. ஏனென்றால் அதில் குடியரசுத் தலைவருக்கு எதிராகவும் கொட்டு விழுகிறது. வழக்கு என்னவோ 10 சட்டமோதாக்கள் தொடர்பானது. ஆனால் இன்றைக்கு அதில் குடியரசுத் தலைவருக்கும் ஒரு கோடு விழுந்துவிட்டது.

10 சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமலேயே சட்டமாக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது தான். ஆனால் ஒரு வழக்கறிஞராக எனக்கு அதில் சில சந்தேகங்கள் உள்ளன. சட்டங்களை இயற்றும் உரிமை நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு இடையே உள்ளது. சட்டங்களை பரிசீலிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது. இவை இரண்டுக்கும் மத்தியில் மெலிதான கோடு ஒன்று உள்ளது. புதிய சட்டங்களை உருவாக்குதல். அப்படி புதிய சட்டவிதியை உருவாக்க முடியுமா? இது ஒரு பெரிய கேள்வி ஆகும். தமிழக ஆளுநரின் முட்டாள்தனமான அணுகுமுறையால் உச்சநீதிமன்றம் நேரடியாக புதிய சட்டத்தை உருவாக்கவில்லை. ஆனாலும் குடியரசுத் தலைவருக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கும்போதும், அது அரசியல் சாசனத்தில் இல்லாத பகுதியாக பார்க்கப்படும். அப்போது, அப்படியான ஒரு உரிமை நீதிமன்றத்திற்கு போய் சேர்ந்தால், லெஜிஸ்லேச்சர் எதற்கு என்கிற கேள்வி வந்துவிடும். உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து மேற்கொண்டு விளக்கம் கொடுக்காத வரை காலவதியான மசோதாக்களுக்கும் இது பொருந்தும். உதாரணமாக நீட் மசோதாவை எடுத்துக்கொள்வோம். இந்த ஆளுநர் திருப்பி அனுப்பி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

ஆளுநர் ரவிக்கு கடிவாளம்.. பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்.. உச்சநீதிமன்றம் அதிரடி..

புதிய தீர்ப்பின்படி அப்படி நிறைவேற்றி அனுப்பினாலே அது சட்டமாகிவிடும். ஆளுநர் கட்டாயம் கையெழுத்து போட்டே ஆகும். குடியரசுத் தலைவர் அந்த மசோதாவை பரிசீலனை செய்து நிராகரிப்பது சட்டவிரோதமாகும். அப்போது தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவை குடியரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை பெற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நீதித்துறையின் அதிகார மீறலாகும். நீதிமன்றம் கட்டற்ற அதிகாரத்தை அவிழ்த்துவிடுகிறதா? என்கிற கேள்வி வரும். ஆனால் இந்த தீர்ப்பின்படி நீட் மசோதாவுக்கு தமிழ்நாட்டில் விலக்கு கிடைத்துவிட்டது. அதை எப்படி எடுத்துக்கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை. எந்த தத்துவத்தின் அடிப்படையில்  ஆளுநர் ஒப்புதல் இன்றி 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதோ? அந்த தத்துவத்தின் படி அதற்கு முன்பாக காலாவதியானதும் செல்லும். இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு அதிரடியாக தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது என்று ஒரு அரசாணை போட முடிவு எடுத்தால்,  அது மத்திய – மாநில அரசுகளுக்கு பெரிய நெருக்கடியாக மாறிவிடும். இதை என்ன செய்ய போகிறோம் என்று தெரியவில்லை? இதனை சட்ட வல்லுநர்கள்தான் விளக்க வேண்டும். ஆனால் இன்றைய தேதிக்கு சட்டத்தின் நிலை இதுதான்.

எதை நோக்கி ஏன் செல்கிறது என்றால்? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு சரியாக இல்லை. நமது நிதிப் பகிர்வு குறித்து எல்லோரும் பேசுவார்கள். அதிகாரப் பகிர்வு என்பதில் மாநில அரசின் அதிகாரங்கள், மத்திய அரசின் அதிகாரங்கள் மற்றும் சட்டம் இயற்றுதல் என்று 3 பிரிவுகள் உள்ளன. சட்டமன்ற இயற்றுதலில் மத்திய சட்டங்கள், மாநில சட்டங்கள் என 2 வகைப்படும். மாநில சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்து, அதை நீர்த்துப்போக செய்யும்போது உச்சநீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. உச்சநீதிமன்றம் ஒரு வியாக்யானம் கொடுக்கும்போது இவ்வளவு பெரிய பின்விளைவுகள் ஏற்படுகிறது. அப்போது ராஜமன்னார் ஆணையத்தின் தீர்மானங்களோ அல்லது இன்றைய தீர்மானங்களோ இதை தவிர்ப்பதற்கு தான் முயற்சி செய்கிறது. அரசியல் சாசன நெருக்கடி ஏற்படக்கூடாது என்பதுதான் நாம் எடுத்த முயற்சிகள் அனைத்தும். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாளுகிறது. அந்த 10 சட்ட மசோதக்கள் மட்டும்தான் அரசிதழில் வெளியிட்டோம். ஆனால் அதை கவனமாக தவிர்த்துள்ளோம்.

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டதற்கு பரிந்துரையாக ஒற்றுமை பாதிக்காத வகையில், உரிமையை மீட்டு எடுப்போம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதை அப்படித்தான் சொல்லியாக வேண்டும். அடுத்தக்கட்ட விமர்சனங்கள் என்ன வரும் என்றால் தமிழ்நாடு பிரிவினை வாதம் பேசுவதாக வரும். அதை தவிர்ப்பதற்கான பிரயோகம்தான் இது. இந்தியா என்பது பெரிய தேசங்களின் தேசமாகும். இதில் மாநிலங்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று கேட்பதோ, நிதிப்பகிர்வு வேண்டும் என்று கேட்பதோ தவறல்ல. இது அடுத்தக் கட்டமாக நீதித்துறை அதிகார மீறலாக இது மாறிவிடக்கூடாது என்பதுதான் எங்களை போன்றவர்களுக்கு கவலையாகும். அது ஆபத்தானதாகும்.

அரசாங்கம் மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டதாகும். நீதிபதிகளுக்கு அப்படி பட்ட கட்டாயம் கிடையாது. இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது என்றால், 4 பேர் தீர்ப்புக்கு ஆதரவாகவும், 3 பேர் எதிராகவும் தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றாலும் 7 பேர் கூடி எடுக்கிற முடிவா? 234 எம்எல்ஏக்கள் கூடி எடுக்கிற முடிவா? அல்லது 500க்கும் மேற்பட்ட எம்பிக்கள் கூடி எடுக்கிற முடிவா? என்று பார்த்தோமானால் இதில் உள்ள ஆபத்து புரியும். ஏன் இந்த நிலை என்றால்? மாநிலங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்துக்கொண்டே போவதாகும். மாநிலங்களின் அதிகாரத்தில் ஆளுநர்கள் தலையிடுவதால். இவற்றை எல்லாம் துடைத்து எறிவதற்காகதான் நாம் மீண்டும் ஒருமுறை மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இது அரசியல் நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டிருந்தாலும் அதை நாம் வரவேற்க தான் வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்

MUST READ