Homeதிருக்குறள்87 - பகை மாட்சி,  கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

87 – பகை மாட்சி,  கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

87 - பகை மாட்சி,  கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

861. வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
        மெலியார்மேல் மேக பகை

கலைஞர் குறல் விளக்கம்மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்.

862. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்றுவ்வான்
        என்பரியும் ஏதிலான் துப்பு

கலைஞர் குறல் விளக்கம்உடனிருப்போரிடம் அன்பு இல்லாமல், வலிமையான துணையுமில்லாமல், தானும் வலிமையற்றிருக்கும்போது பகையை எப்படி வெல்ல முடியும்?

863. அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
       தஞ்சம் எளியன் பகைக்கு

கலைஞர் குறல் விளக்கம்அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும், இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

864. நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
        யாங்கணும் யார்க்கும் எளிது

கலைஞர் குறல் விளக்கம்சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
        பண்பிலன் பற்றார்க் கினிது

கலைஞர் குறல் விளக்கம்நல்வழி நாடாமல், பொருத்தமானதைச் செய்யாமல், பழிக்கு அஞ்சாமல், பண்பும் இல்லாமல் ஒருவன் இருந்தால் அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
       பேணாமை பேணப் படும்

கலைஞர் குறல் விளக்கம்சிந்திக்காமலே சினம் கொள்பவனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.

867. கொடுத்துங் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
        மாணாத செய்வான் பகை

கலைஞர் குறல் விளக்கம்தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.

868. குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
        கினனிலனாம் ஏமாப் புடைத்து

கலைஞர் குறல் விளக்கம்குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால், அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.

869. செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
        அஞ்சும் பகைவர்ப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம்அஞ்சிடும் கோழைகளாகவும், அறிவில்லாக் கோழைகளாகவும் பகைவர்கள் இருப்பின் அவர்களை எதிர்ப்போரை விடுத்து வெற்றியெனும் இன்பம் விலகாமலே நிலைத்து நிற்கும்.

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
        ஒல்லானை ஒல்லா தொளி

கலைஞர் குறல் விளக்கம்போர்முறை கற்றிடாத பகைவர்களைக்கூட எதிர்ப்பதற்குத் தயக்கம் காட்டுகிறவர்கள், உண்மையான வீரர்களை எப்படி எதிர்கொள்வார்கள் எனக் கேலிபுரிந்து, புகழ் அவர்களை அணுகாமலே விலகிப் போய்விடும்.

MUST READ