spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்127-அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

127-அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

127. அவர்வயின் விதும்பல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
          நாளொற்றித் தேய்ந்த விரல்

கலைஞர் குறல் விளக்கம்வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறிபிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்நதன.

we-r-hiring

1262. இலங்கிழாய் இன்று மறப்பினென் தோள்மேல்
          கலங்கழியும் காரிகை நீத்து

கலைஞர் குறல் விளக்கம்காதலரைப் பிரிந்திருக்கும் நான், பிரிவுத் துன்பம் வாராதிருக்க அவரை மறந்திருக்க முனைந்தால், என் தோள்கள் அழகு நீங்கி மெலிந்து போய் வளையல்களும் கழன்று விழுவது உறுதியடி என் தோழி.

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
          வரல்நசைஇ இன்னும் உளேன்

கலைஞர் குறல் விளக்கம்ஊக்கத்தையே உறுதுணையாகக் கோண்டு வெற்றியை விரும்பிச் சென்றுள்ள காதலன், திரும்பி வருவான் என்பதற்காகவே நான் உயிரோடு இருக்கிறேன்.

1264. கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
          கொடுகொ டேறுமென் நெஞ்சு

கலைஞர் குறல் விளக்கம்காதல் வயப்பட்டுக் கூடியிருந்து பிரிந்து சென்றவர் எப்போது வருவார் என்று என் நெஞ்சம். மரத்தின் உச்சிக் கொம்பில் ஏறிப் பார்க்கின்றது.

1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
          நீங்குமென் மென்தோள் பசப்பு

கலைஞர் குறல் விளக்கம்கண்ணார என் கணவனைக் காண்போனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்.

1266. வருகமன் கொண்கன் ஒருநாட் பருகுவன்
          பைதல்நோய் எல்லாம் கெட

கலைஞர் குறல் விளக்கம்என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஓருநாள் வந்துதான் ஆகவேண்டும் வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன்.

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
           கண்ணன்ன கேளிர் வரின்

கலைஞர் குறல் விளக்கம்கண்ணின் மணியாம் என் காதலர் வந்தவுடன், பிரிந்திருந்த துயரின் காரணமாக அவருடன் ஊடல் கொள்னோ? அல்லது கட்டித் தழுவிக் கொள்வேனோ? அல்லது ஊடுதல் கூடுதல் ஆகிய இரண்டையும் இணைத்துச் செய்வேனோ? ஒன்றுமே புரியவில்லையே எனக்கு; அந்த இன்பத்தை நினைக்கும்போது.

1268. வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
          மாலை அயாகம் விருந்து

கலைஞர் குறல் விளக்கம்தலைவன், தான் மேற்கொண்டுள்ள செயலில் வெற்றி பெறுவானாக; அவன் வென்றால் என் மனைவியுடன் எனக்கு மாலைப்பொழுதில் இன்ப விருந்துதான்.

1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
          வருநாள்வைத் தேங்கு பவர்க்கு

கலைஞர் குறல் விளக்கம்நெடுந்தொலைவு சென்ற காதலர் திரும்பி வரும் நாளை எதிர்பார்த்து ஏங்குபவர்க்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகத் தோன்றும்.

1270. பெறினென்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
          உள்ளம் உடைந்துக்கக் கால்

கலைஞர் குறல் விளக்கம்துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போய்விடுமானால். பிறகு ஒருவரையோருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடுவதினாலோ, என்ன பயன்?.

MUST READ