spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்116 - பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

116 – பிரிவு ஆற்றாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

116. பிரிவு ஆற்றாமை கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1151. செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
          வல்வரவு வாழ்வார்க் குரை

கலைஞர் குறல் விளக்கம்பிரிந்து செல்வதில்லையென்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல். நீ போய்த்தான் தீர வேண்டுமென்றால் நீ திரும்பி வரும்போது யார் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் இப்போதுவிடைபெற்றுக் கொள்.

we-r-hiring

1152. இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்\
          புன்கண் உடைத்தால் புணர்வு

கலைஞர் குறல் விளக்கம்முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல்தழுவிக்களிக்கும்போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

1153. அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
          பிரிவோ ரிடத்துண்மை யான்

கலைஞர் குறல் விளக்கம்பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்து செல்ல நேரிடுவதால்; ”பிரிந்திடேன்” என அவர் கூறுவதை உறுதி செய்திட இயலாது.

1154. அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
          தேறியார்க் குண்டோ தவறு

கலைஞர் குறல் விளக்கம்பிரிந்திடேன்; அஞ்சாதே எனச் சொல்லியவர் எனைப் பிரிந்து செல்வாரானால், அவர் சொன்னதை நம்பியதில் என்ன குற்றமிருக்க முடியும்?

1155. ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
          நீங்கின் அரிதால் புணர்வு

கலைஞர் குறல் விளக்கம்காதலர் பிரிந்து சென்றால் மீண்டும் கூடுதல் எளிதல்ல என்பதால், அவர் பிரிந்து செல்லாமல் முதலிலேயே காத்துக் கொள்ள வேண்டும்.

1156. பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
          நல்குவர் என்னும் நசை

கலைஞர் குறல் விளக்கம்போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்.

1157. துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
          இறைஇறவா நின்ற வளை

கலைஞர் குறல் விளக்கம்என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!

1158. இன்னா தினன்இல்லூர் வாழ்தல் அதனினும்
          இன்னா தினியார்ப் பிரிவு

கலைஞர் குறல் விளக்கம்நம்மை உணர்ந்து அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானது; அதைக் காட்டிலும் துன்பமானது இனிய காதலரைப் பிரிந்து வாழ்வது.

1159. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
          விடிற்சுடல் ஆற்றுமோ தீ

கலைஞர் குறல் விளக்கம்ஒருவரை யொருவர் காணாமல் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!

1160. அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
          பின்இருந்து வாழ்வார் பலர்

கலைஞர் குறல் விளக்கம்காதலர் பிரிந்து செல்வதற்கு ஒப்புதல் அளித்து, அதனால் ஏற்படும் துன்பத்தைப் போக்கிக் கொண்டு, பிரிந்த பின்னும் பொறுத்திருந்து உயிரோடு வாழ்பவர் பலர் இருக்கலாம்; ஆனால் நான்?

MUST READ