spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்126-நிறையழிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

126-நிறையழிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

126 - நிறையழிதல்,கலைஞர் குறல் விளக்கம்,திருக்குறள்,

1251. காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
          நாயுத்தாழ் வீழ்த்த கதவு

கலைஞர் குறல் விளக்கம்காதல் வேட்கை இருக்கிறதே, அது ஒரு கோடரியாக மாறி, நாணம் எனும் தாழ்ப்பாள் போடப்பட்ட மனஅடக்கம் என்கிற கதவையே உடைத்தெறிந்து விடுகின்றது.

we-r-hiring

1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
          யாமத்தும் ஆளும் தொழில்

கலைஞர் குறல் விளக்கம்காதல் வேட்கை எனப்படும் ஒன்று இரக்கமே இல்லாதது; ஏனெனில் அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது.

1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ கறிப்பின்றித்
          தும்மல்போல் தோன்றி விடும்

கலைஞர் குறல் விளக்கம்எவ்வளவுதான் அடக்க முயன்றாலும் கட்டுப்படாமல் தும்மல் நம்மையும் மீறி வெளிப்படுகிறதல்லவா; அதைப் போன்றதுதான் காதல் உணர்ச்சியும்; என்னதான் மறைந்தாலும் காட்டிக் கொடுத்துவிடும்.

1254. நிறையுடையேன் என்பேன்மேன் யானோவென் காமம்
          மறையிறந்து மன்று படும்

கலைஞர் குறல் விளக்கம்மன உறுதிகொண்டவள் நான் என்பதே என் நம்பிக்கை; ஆனால் என் காதல், நான் மறைப்பதையும் மீறிக்கொண்டு மன்றத்திலேயே வெளிப்பட்டு விடுகிறதே.

1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
          உற்றார் அறிவதொன் றன்று

கலைஞர் குறல் விளக்கம்தம்மைப் பிரிந்து சென்று காதலரைப் பகையாகக் கருதி அவரைத் தொடர்ந்து செல்லாத மன அடக்கம், காதல் நோயுற்றவர்க்கு இருப்பதில்லை.

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தாரோ
          எற்றென்னை உற்ற துயர்

கலைஞர் குறல் விளக்கம்வெறுத்துப் பிரிந்ததையும் பொறுத்துக் கொண்டு அவர் பின்னே செல்லும் நிலையை என் நெஞ்சுக்கு ஏற்படுத்திய காதல் நோயின் தன்மைதான் என்னே.

1257. நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
          பேணியார்  பெட்ப செயின்

கலைஞர் குறல் விளக்கம்நமது அன்புக்குரியவர் நம்மீது கொண்ட காதலால் நமக்கு விருப்பமானவற்றைச் செய்யும்போது, நாணம் எனும் ஒரு பண்பு இருப்பதையே நாம் அறிவதில்லை.

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
          பெண்மை உடைக்கும் படை

கலைஞர் குறல் விளக்கம்நம்முடைய பெண்மை எனும் உறுதியை உடைக்கும் படைக்கலனாக இருப்பது, பல மாயங்களில் வல்ல கள்வராம் காதலரின் பணிவான பாகுமொழியன்றோ?

1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
          கலத்தல் உறுவது கண்டு

கலைஞர் குறல் விளக்கம்ஊடல் கொண்டு பிணங்குவோம் என நனைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்.

1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ
          புணர்ந்தூடி நிற்போம் எனல்

கலைஞர் குறல் விளக்கம்நெருப்பிலிட்ட கொழுப்பைப் போல் உருகிடும் நெஞ்சம் உடையவர்கள், கூடிக் களித்தபின் ஊடல் கொண்டு அதில் உறுதியாக இருக்க முடியுமா?

MUST READ