spot_imgspot_imgspot_imgspot_img
Homeதிருக்குறள்124 - உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

124 – உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

124. உறுப்புநலன் அறிதல்,கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
          நறுமலர் நாணின கண்

கலைஞர் குறல் விளக்கம்பிரிவுத் துன்பத்தை நமக்களித்துவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டாரேயென்று வருந்திடும் காதலியின் கண்கள் அழகிழந்தபோய் மலர்களுக்கு முன்னால் நாணிக் கிடக்கின்றன.

we-r-hiring

1232. நயந்தவர் நல்காமை கொல்லுவ போலும்
          பசந்து பனிவாரும் கண்

கலைஞர் குறல் விளக்கம்பசலை நிறம் கொண்டு நீர் பொழியும் கண்கள், விரும்பிய காதலர் அன்பு காட்டவில்லை யென்பதைச் சொல்லிக் காட்டுகின்றன

1233. தணந்தமை சால அறிவிப்ப போலும்
          மணந்தநாள் வீங்கிய தோள்

கலைஞர் குறல் விளக்கம்தழுவிக் கிடந்த போது பூரித்திருந்த தோள், இப்போது மெலிந்து காணப்படுவது, காதலன் பிரிவை அறிவிப்பதற்காகத்தான் போலும்.

1234. பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
          தொல்கவின் வாடிய தோள்

கலைஞர் குறல் விளக்கம்பருந்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் சுழன்று விழுகின்றன, காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக.

1235. கொடியார் கொடுமை உரைக்கும் தொடியோடு
          தொல்கவின் வாடிய கொள்

கலைஞர் குறல் விளக்கம்வளையல்களும் கழன்று விழ, இருந்த அழகையும் இழந்த தோள்கள் என்னைப் பிரிந்திருக்கும் காதலரின் கொடுமையை ஊருக்கு உரைக்கின்றன.

1236. தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
          கொடியார் எனக்கூறல் நொந்து

கலைஞர் குறல் விளக்கம்என் தோள்கள் மெலிவதையும், வளையல்கள் கழன்று விழுவதையும் காண்போர் என்னுடையவர் இரக்கமற்றவர் என இயம்புவது கேட்டு இதயம் நொந்து போகிறேன்.

1237. பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
          வாடுதோட் பூசல் உரைத்து

கலைஞர் குறல் விளக்கம்நெஞ்சே! இரக்கமற்ற  என்னைப் பிரிந்திருக்கும் அவருக்கு வாடி வதங்கும் என தோள்களின் துன்பத்தை உரைத்துப் பெருமை அடைய மாட்டாயோ?

1238. முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
          பைந்தொடிப் பேதை நுதல்

கலைஞர் குறல் விளக்கம்இறுகத் தழுவியிருந்த கைகளைக் கொஞ்சம் தளர்த்தவே அந்தச் சிறு இடைவேளியையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் காதலியின் நெற்றி, பசலைநிறம் கொண்டுவிட்டது.

1239. முயங்கிடைத் தணவளி போழப் பசப்புற்ற
          பேதை பெருமழைக் கண்

கலைஞர் குறல் விளக்கம்இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே  ஒரு பிரிவு எனக் கருதி தாதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன.

1240. கண்ணின் பசப்போ பருவரல் எள்தின்றே
          ஒண்ணுதல் செய்தது கண்டு

கலைஞர் குறல் விளக்கம்பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்து விட்டது.

MUST READ