spot_imgspot_img
Homeதிருக்குறள்133 - ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

133 – ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

133. ஊடலுவகை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

1321. இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல
தவரளிக்கும் ஆறு

கலைஞர் குறல் விளக்கம்எந்தத் தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.

we-r-hiring

1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
          வாடினும் பாடு பெறும்

கலைஞர் குறல் விளக்கம்காதலரிடையே மலர்ந்துள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு. ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.

1323. புலத்தலிற் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
நீரியைந்
தன்னார் அகத்து

கலைஞர் குறல் விளக்கம்நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?

1324. புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம்
உடைக்கும் படை

கலைஞர் குறல் விளக்கம்இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.

1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
         அகறலின் ஆங்கொன் றுடைத்து

கலைஞர் குறல் விளக்கம்தவறே செய்யாத நிலையிலும்கூட, தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.

1326. உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலின்
ஊடல் இனிது

கலைஞர் குறல் விளக்கம்உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம், அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.

1327. ஊடலின் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற்
காணப் படும்

கலைஞர் குறல் விளக்கம்ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும்போது உணரப்படும்.

1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில்
தோன்றிய உப்பு

கலைஞர் குறல் விளக்கம்நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெறமுடியுமல்லவா?

1329. ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக
மன்னோ இரா

கலைஞர் குறல் விளக்கம்ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கு இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.

1330. ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி
முயங்கப் பெறின்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.

MUST READ