Homeதிருக்குறள்93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

-

- Advertisement -

93 – கள்ளுண்ணாமை, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

921. உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
        கட்காதல் கொண்டொழுகு வார்.

கலைஞர் குறல் விளக்கம்மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல, மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.

922. உண்ணற்க கள்ளை உணிலுண்க சான்றோரான்
        எண்ணப் படவேண்டா தார்

கலைஞர் குறல் விளக்கம்மது அருந்தக் கூடாது: சான்றோர்களின் நன் மதிப்பைப் பெறவிரும்பாதவர் வேண்டுமானால் அருந்தலாம்.

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
        சான்றோர் முகத்துக் களி

கலைஞர் குறல் விளக்கம்கள்ளருந்தி மயங்கிடும் தன் மகனை, அவன் குற்றங்களை மன்னிக்கக் கூடிய தாயே காணச் சகிக்கமாட்டாள் என்கிறபோது ஏனைய சான்றோர்கள் அவனை எப்படிச் சகித்துக் கொள்வார்கள்.

924. நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

கலைஞர் குறல் விளக்கம்மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால் நாணம் என்று சொல்லப்படும் நற்பண்பு நிற்காமல் ஓடிவிடும்.

925. கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
        மெய்யறி யாமை கொளல்

கலைஞர் குறல் விளக்கம்ஒருவன் தன்னிலை மறந்து மயங்கியிருப்பதற்காகப், போதைப் பொருளை விலை கொடுத்து வாங்குதல் விவரிக்கவே முடியாத மூடத்தனமாகும்.

926. துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
        நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

கலைஞர் குறல் விளக்கம்மது அருந்துவோர்க்கும் நஞ்சு அருந்துவோர்க்கும் வேறுபாடு கிடையாது என்பதால் அவர்கள் தூங்குவதற்கும் இறந்து கிடப்பதற்கும்கூட வேறுபாடு கிடையாது என்று கூறலாம்.

927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
        கள்ளொற்றிக் கண்சாய் பவர்

கலைஞர் குறல் விளக்கம்மறைந்திருந்து மதுவருந்தினாலும் மறைக்க முடியாமல் அவர்களது கண்கள் சுழன்று மயங்குவதைக் கண்டு ஊரார் எள்ளி நகையாடத்தான் செய்வார்கள்.

928. களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்
        தொளித்ததூஉம் ஆங்கே மிகும்

கலைஞர் குறல் விளக்கம்மது அருந்துவதே இல்லை என்று ஒருவன் பொய் சொல்ல முடியாது காரணம், அவன் மது மயக்கத்தில் இருக்கும் போது அந்த உண்மையைச் சொல்லி விடுவான்.

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
        குளித்தானைத் தீத்துரீஇ அற்று

கலைஞர் குறல் விளக்கம்குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனைத் திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக்கண்டுபிடிக்கத் தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான்.

930. கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
        உள்ளான்கொல் உண்டதன் சோர்வு

கலைஞர் குறல் விளக்கம்ஒரு குடிகாரன், தான் குடிக்காமல் இருக்கும்போது மற்றொரு குடிகாரன் மது மயக்கத்தில் தள்ளாடுவதைப் பார்த்த பிறகாவது அதன் கேட்டினை எண்ணிப் பார்க்க மாட்டானா?

MUST READ