spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதிருப்பரங்குன்றம் ரகசியம்! அமித்ஷா செயலால் மரண பயணத்தில அதிமுக!

திருப்பரங்குன்றம் ரகசியம்! அமித்ஷா செயலால் மரண பயணத்தில அதிமுக!

-

- Advertisement -

சிறுபான்மை மக்களை எதிரிகளாக காட்டி, தமிழ்நாட்டு இந்துக்களின் வாக்குகளை பாஜகவால் பெறவே முடியாது என்று விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ் தெரித்துள்ளார்.

we-r-hiring

பாஜக முன்னெடுக்கும் முருகர் மாநாடு அற்றும் அதன் பின்னால் உள்ள அரசியல் கணக்குகளை தோலுரித்துக்காட்டும் விதமாக ஆளுர்ர ஷா நவாஸ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கடவுளை, மதத்தை கையில் எடுத்து, அதன் மூலம் சிறுபான்மை மக்களை எதிரியாக முன்னிறுத்தி பொதுமக்களை அணி திரட்டுவது என்பது வடமாநிலங்களில் ஒரு காலத்தில் பாஜகவுக்கு கைகொடுத்தது. இன்றைக்கு அயோத்தியிலேயே அவர்கள் படுதோல்வியை சந்தித்தார்கள். கர்நாடகாவில் அனுமானை முன்வைத்தும், கேரளாவில் ஐய்யப்பனை முன்னிறுத்தியும், ஒடிசாவில் ஜெகனாதரையும் முன்வைத்தும் பிரச்சாரம் செய்தார்கள். தமிழ்நாட்டில் வெறுப்பு அரசியலை மக்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ள அதிமுகவும் இதுபோன்ற செயல்களை செய்தது கிடையாது. மதுரையில் முருகன் மாநாடு போட்டு, அதன் மூலம் அரசியல் அறுவடை எடுக்க வேண்டும் என்கிற செயல் திட்டத்தை அதிமுக ஏற்குமா? கூட்டணியே ஏற்காத ஒன்றை பாஜக மக்கள் ஏற்பார்கள் என்று நம்பி வருகிறது. மதுரை சமூக நல்லிணக்கத்திற்கு பெயர் போன மண்ணாகும். அங்கு ஆதீனத்தை கையில் வைத்துக்கொண்டு, திருப்பரங்குன்றம் மலையிலும் இப்படி பட்ட பிரச்சினையை செய்கிறார்கள். சிக்கந்தர் தர்கா, என்பது திமுக கொண்டுவந்ததா? சிக்கந்தர் தர்கா, திருப்பரங்குன்றம் மலை மீது காலங்காலமாக உள்ளது. அமைதியாக உள்ள இடத்தில் இந்த பிரச்சினையை கிளப்ப வேண்டிய தேவை என்ன வந்தது?

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

முருகன் கோவிலில் என்ன வழிபாட்டு முறை உள்ளதோ, அதன்படி அங்கு செல்கிற மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். காசி விஸ்வநாதர் கோவிலில் என்ன வழிபாட்டு முறைகள் உள்ளனவோ, அந்த முறைகளை பின்பற்றி மக்கள் வழிபாடு நடத்துகிறார்கள். அதேபோல், சிக்கந்தர் தர்காவில் வழிபாட்டு முறை உள்ளதோ? அந்த நம்பிக்கையின்படி அங்கு வழிபாடு நடத்துகிறார்கள். அப்படி இருக்கிறபோது திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா எப்படி இருக்கலாம் என்று பாஜக கேள்வி எழுப்புகிறது. காசி விஸ்வநாதர் கோவில் எப்படி இருக்கலாம் என்று யாரும் கேட்கவில்லை. முருகன் கோவில் எப்படி இருக்கலாம் என்று யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அவை இருக்கின்றன. அவரவர் நம்பிக்கை அங்கு இருக்கிறது. அவர்கள் பின்பற்றுகிறார்கள். ஆனால், பாஜகவின் தொணியை பாருங்கள் சிக்கந்தர் தர்கா எப்படி இருக்கலாம்? ஹெச்.ராஜா அந்த தர்காவை வேறு இடத்திற்கு மாற்றி வைக்க வேண்டும் என்று சொல்கிறார். இது எவ்வளவு பெரிய வெறுப்பு பிரச்சாரம். அதையே தான் இன்றைக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சொல்கிறார். ஹெச்.ராஜா தெருவில் பேசிவிட்டு செல்பவர். ஆனால் அமித்ஷா மக்கள் பிரதிநிதியாவார். ஒரு அமைச்சராக இருக்கக்கூடியவர், இப்படி அப்பட்டமாக மதவெறியை உமிழ்ந்துவிட்டு போகலாமா? தமிழ்நாடு இதனை மிகவும் கோபமுடன் அணுகும். மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது. அதற்கு பாமகவே சாட்சி.

பாமக தொடங்கப்படுகிறபோது ராமதாசை சுற்றி பெரிய பெரிய மார்க்சியவாதிகள் இருந்தனர். புரட்சிகரமான சிந்தனை உள்ளவர்கள் அந்த இயக்கத்திற்கு கொள்கைகளை வகுத்து தந்தனர். பாமக மிகப்பெரிய உச்சத்திற்கு போகும் என்றும், அதன் மூலமாக மாற்றம் வரும் என்று எதிர்பார்த்து துணை இருந்தார்கள். இடதுசாரிகளால் வழிநடத்தப்பட்ட இயக்கத்தை, இன்றைக்கு வலதுசாரிகள் உட்கார்ந்து பஞ்சாயத்து செய்கிறார்கள் என்று திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். பாமகவின் வீழ்ச்சிக்கு காரணம் மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை கையில் எடுத்தார்கள். ஒரு சமுதாயத்தை எதிரியாக காட்டினால் மொத்த சமுதாயமும் நம்முடைய பின்னால் வந்துவிடும். மகனை முதலமைச்சர் ஆக்கிவிடலாம் என்று கனவு கண்டார். ஆனால் அந்த திட்டம் படுதோல்வி அடைந்தது. அதேபோல்தான் சிறுபான்மை மக்களை எதிரிகளாக காட்டி, தமிழ்நாட்டு இந்துக்களின் வாக்குகளை பாஜகவால் பெறவே முடியாது.

கோவில்களில் திருப்பணி செய்வது, கோயில் நிலங்களை மீட்பது உள்ளிட்டவை செய்வது ஒரு அரசின் கடமையாகும். எந்த சமுதாயத்திற்கும் பாதிப்பு ஏற்பாடாத வகையில் அரசு அந்த பணிகளை செய்கிறது. ஆனால் பாஜகவின்  முருகன் மாநாடு வெறுமனே பக்தி அடிப்படையிலானதா?. இந்து மக்களுக்கு நன்மை பயக்கூடிய ஒன்றா? முருகன் மாநாட்டை நடத்துவோம் 2026ல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் போய் உட்காருவோம் என்று சொல்கிறார்கள். முருகன் மாநாட்டிற்கும் கோட்டைக்கும் என்ன தொடர்பு உள்ளது. முருகன் மாநாட்டிற்கும் தேர்தல் அரசியலுக்கும் என்ன தொடர்பு உள்ளது? எந்த கட்சியாவது பக்தியை கொண்டுவந்து தேர்தலோடு தொடர்பு படுத்தி உள்ளதா? தேர்தல் பிரச்சாரத்தின்போது நாங்கள் இந்த திட்டங்களை செய்துள்ளோம். இந்த திட்டங்களை செய்வோம் என்று சொல்வார்கள். ஆனால் முருகன் மாநாடு நடத்துகிறோம். 2026ல் ஆட்சி அமைப்போம் என்கிறார்கள். முதிர்ச்சியான அணுகுமுறை கொண்ட தமிழ்நாட்டு மக்களிடம் பாஜக மதத்தின் அடிப்படையில் பிளவை ஏற்படுத்தலாம் என்று பார்க்கிறது. இதை அனுமதிக்க கூடாது.

இந்த அரசியலை சொன்னால் பாஜக வெற்றிபெறாது. அதோடு சேருகிற கட்சியும் படுதோல்வி அடையும். ஆனால் தமிழ்நாட்டில் வந்து இப்படி துணிச்சலாக பேசக்கூடிய போக்கு எவ்வளவு ஆபத்தானது. வெறுமனே வாக்குகளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். பகல்காம் தாக்குதலை பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துகிறது. அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். இப்படி பேசுவதன் மூலம் தமிழ்நாட்டில் விஷத்தை விதைக்கப் பார்க்கிறார்கள். இதை நாம் அனுமதிக்கக்கூடாது. இதை ஒருங்கிணைந்து நாம் முறியடிக்க வேண்டும். இது அதிமுகவுக்கு தான் மிகப்பெரிய சிக்கலாக முடியும். பாஜக தனது கொள்கைகளில் சமரசம் செய்துகொண்டு ஒரு கூட்டணிக்கு வந்தால், அது வேறு. திமுக, பாஜகவுடன் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் கூட்டணி வைத்தார்கள். அந்த கூட்டணி இருந்தவரை ராமர் கோவில், பொதுசிவில் சட்டம் போன்ற, சட்டப்பிரிவு 370 போன்ற விஷயங்களை அவர்கள் கையில் எடுக்கவில்லை. ஆனால் தமிழ்நாடு அந்த கூட்டணியை எதிர்த்தது. ஆனால் இன்றைக்கு அப்படிப்பட்ட ஒப்பந்தம் எதுவும் உள்ளதா?

எடப்பாடி தலைமையில் ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். 2026ல் பாஜக கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்கிறார். அதையே மறுக்க முடியாமல் அதிமுக சிக்கிக்கொண்டு உள்ளது. அதிமுக கூட்டணி முதலில் கூட்டணியாக உள்ளதா?  பாமக நிலை என்ன? தேமுதிகவின் நிலை என்ன? ஒரு கட்சி சொல்லுங்கள் உருப்படியாக உள்ளதா? அதிமுக – பாஜக கூட்டணி அமைந்து  2 மாதங்கள் ஆகிவிட்டதே எங்கேயாவது ஒரு மேடையில் இரு கட்சியினரும் ஒன்றாக தோன்றி பார்த்துள்ளோம். திமுக கூட்டணி 8 வருடங்களை கடந்து போய் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் மேடைகளில் ஒன்றாக நிற்கிறோம். அடுத்த தேர்தலை ஒன்றாக சந்திப்போம் என்று சொல்கிறோம். இன்றைக்கு பாஜக எதிர்ப்பில் உறுதியாக நிற்கிறோம்.  இந்த உறுதி உங்களிடம் உள்ளதா? திமுக எதிர்ப்பு அடிப்படையில் தான் ஒன்று சேர்ந்தீர்கள். அந்த எதிர்ப்பின் அடிப்படையில் எங்கேயாவது போராட்டம் நடததியுள்ளீர்களா?

அதிமுக என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான கட்சியாகும். அதன் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மத மாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிட தடை என்பன போன்ற சட்டங்களை கொண்டுவந்தார். அதன் காரணமாக மிகப்பெரிய பின்னடைவை அவர் சந்தித்தார்.கடையில் அவரே, தான் கொண்டு வந்த சட்டங்களை வாபஸ் பெற்றார். அந்த கட்சிக்கும் தமிழ்நாடு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. தற்போது பாஜகவை சேர்த்துக்கொண்டு களத்திற்கு செல்லலாம் என்கிறபோது, திருப்பரங்குன்றம் பிரச்சினையை கிளப்பி  மக்களை பிளவுபடுத்துகிற முழக்கத்தை அமித்ஷா முன்னிவைக்கிறார். முருகன் மாநாட்டை நடத்துகிறார். தேர்தலை இந்த கோணத்தில் நகர்த்தி சென்றார்கள் என்றால் அது அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பாஜகவுடன் சேருகிற அனைத்து கட்சிகளுக்கும் பிரச்சினையாக முடியும். அந்த கட்சிகளை எல்லாம் குழிதோண்டி புதைப்பதுதான் பாஜவின் திட்டமாகும். அவர்கள் தெரியாமல் இதை செய்யவில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ