Homeசெய்திகள்கட்டுரை"நிர்வாகத் திறமையின்மையால் கப்பல் ஏறும் தவெக-வின் கௌரவம்!" - மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசார நேர்காணல்

“நிர்வாகத் திறமையின்மையால் கப்பல் ஏறும் தவெக-வின் கௌரவம்!” – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் காரசார நேர்காணல்

-

- Advertisement -

“கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவத்தில் தவெக தரப்பின் அப்பட்டமான அலட்சியமும், நிர்வாகத் திறமையின்மையும் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் கௌரவம் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாகக் கப்பல் ஏறி வருகிறது” என்று மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான கோட்டீஸ்வரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோட்டீஸ்வரன்

we-r-hiring

இணைய ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக நேர்காணலில், கரூர் விபத்திற்குப் பிந்தைய தவெக அரசின் நடவடிக்கைகள் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

​”குழந்தைகள் உயிரிழக்கும் போது ஓடுவதுதான் முதலமைச்சருக்கு அழகா?”

​செய்தியாளர் சந்திப்பில் கரூர் சம்பவத்தின் கோரத்தை விவரித்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்: “கரூரில் தவெக தரப்பு நடத்திய விளம்பர அரசியலால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 அப்பாவி உயிர்கள் பறிபோயின. அங்கே மக்கள் மூச்சுத்திணறி, குழந்தைகள் உயிரிழந்து கொண்டிருக்கும் போது, ஒட்டுமொத்தப் பொறுப்பையும் தட்டிக்கழித்துவிட்டு முதலமைச்சர் விஜய் அங்கிருந்து ஓடுகிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு இந்தச் செயல் தகுதியானதுதானா?

சம்பவத்தின் போது காவல்துறையினர் தெளிவாக எச்சரித்தும், தங்களின் சுய விளம்பரத்திற்காகக் கேமராக்களை மாட்டி ஷூட்டிங் நடத்த பஸ்ஸைக் கொண்டு போய் நிறுத்தியுள்ளனர். இன்று தவறு முழுவதையும் காவல்துறையின் மீது போட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள்.”

​”அம்பலப்படுத்திய இடதுசாரிகளும், திமுகவின் வியூகமும்”

​”இந்த விவகாரத்தில் தவெக அரசு மற்றும் அதன் நிர்வாகிகளின் கேவலமான அப்ரோச்சை கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ மற்றும் சிபிஎம்) ஆதாரங்களுடன் நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அப்பட்டமாக அம்பலப்படுத்தியுள்ளன. ‘ஆட்சிக்கு வந்தால் வெளிப்படைத்தன்மையுடன் இருப்போம்’ என்று சொன்ன விஜய், இப்போது செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் தப்பித்து ஓடுவது ஏன்? அரசியல் ரீதியாகத் தவெக-வை முழுமையாக முடக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகத் தெளிவான ஆவணங்களுடன் களம் இறங்கியுள்ளார். சிபிஐ விசாரணையில் செந்தில் பாலாஜி கொடுத்த வாக்குமூலங்கள் மற்றும் ஊடகங்கள் உடைத்த உண்மைகள் அனைத்தும் விஜய்யை வளைத்துப் பிடிப்பதற்கான திமுகவின் அரசியல் ஸ்கெட்ச்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​கூட்டணிக்குள் புகைச்சல்: 54 பதவிகள் பறிபோகும் அபாயம்?

​அரசியல் களம் குறித்து மேலும் பேசிய கோட்டீஸ்வரன், “வேலுமணி போன்றவர்களால் விஜய் தரப்பிற்கு மேலும் சிக்கல்கள் அதிகரித்துள்ளன. நீதிமன்றத்தின் அண்மைய உத்தரவுகளால் சுமார் 54 பதவிகள் பறிபோகும் அபாயமும், தவெக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவங்கள் வரை தவெக அரசின் சட்டம்-ஒழுங்கு தோல்வியைச் சுட்டிக்காட்டுகின்றன. வெறுமனே சினிமாவில் பில்டப் கொடுப்பதைப் போல அரசியலிலும், ஆட்சியிலும் சாதிக்க முடியாது என்பதை இந்த கரூர் துயரச் சம்பவம் விஜய்க்கு உணர்த்தியுள்ளது. தவெக தலைவர் தனது நிர்வாகக் கோளாறுகளைச் சரிசெய்யாவிட்டால், மக்கள் மத்தியில் அவர்களின் மானம் முழுமையாகக் கப்பல் ஏறுவதைத் தவிர்க்க முடியாது” என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தனது பேட்டியில் எச்சரித்துள்ளார்.

MUST READ