வரி ஏய்ப்பு புகார் சம்பந்தமாக Sea shell உணவக கிளைகளில் ஐடி அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதோடு, நடிகர் ஆர்யா நடத்தி வந்த அண்ணா நகர் கிளையிலும் 8 ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.sea shell என்ற பிரபல அரேபியன் ஸ்டைல் உணவகத்தின் கிளைகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இந்த உணவகத்திற்கு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளன. இதன் தலையிடமாக கேரளாவே விளங்குகிறது. இதில் சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்துள்ளார். இதை தற்போது அவர் விற்று விட்டார் எனவும் கூறப்படுகிறது. இதே போல சென்னை வேளச்சேரி கொட்டிவாக்கம் துரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள Sea shell உணவக கிளைகளிலும், போயஸ் கார்டன் காமதேனு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அப்துல் சலாம் என்பவரின் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. அப்துல் சலாம் ஆர்யாவுக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் கூறப்படுகிறது.
கேரள வருமான வரித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், சென்னை வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். சோதனை முடிவிலேயே எவ்வளவு வரிஏய்ப்பு நடந்திருக்கிறது? முறைகேடான பணப் பரிமாற்றம்? கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் தெரியவரும் என ஐடி அதிகாரிகள் கூறினாா்கள்.
- Advertisement -