1191. தாம்வீழ்வாா் தம்வீழப் பெற்றவா் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
கலைஞர் குறல் விளக்கம் – தம்மால் விரும்பப்படும் காதலர், தம்மை விரும்புகிற பேறு பெற்றவர் விதையில்லாத பழத்தைப் போன்ற காதல் வாழ்க்கையின் பயனைப் பெற்றவராவார்.

1192. வாழ்வாா்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வாா்க்கு
வீழ்வாா் அளிக்கும் அளி
கலைஞர் குறல் விளக்கம் – காதலர்கள் ஒருவரையொருவர் உரிய நேரத்தில் சந்தித்து அன்பு பொழிவது வாழ்வதற்குத் தேவையான பருவமழை பொழிவது போன்றதாகும்.
1193. வீழுநா் வீழப் படுவாா்க் கமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
கலைஞர் குறல் விளக்கம் – காதலன்பில் கட்டுண்டு பிரியாமல் இணைந்திருப்பவர்களுக்குத் தான் இன்புற்று வாழ்கிறோம் எனும் பெருமிதம் ஏற்படும்.
1194. வீழப் படுவாா் கெழீஇயிலா் தாம்வீழ்வாா்
வீழப் படாஅா் எனின்
கலைஞர் குறல் விளக்கம் – விரும்பப்படாத நிலை ஏற்படின், அந்தக் காதலர் நட்புணர்வு இல்லாதவராகவே கருதப்படுவார்.
1195. நாம்காதல் கொண்டாா் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை
கலைஞர் குறல் விளக்கம் – நான் விரும்பிக் காதல் கொள்வது போன்று அவர் என்னை விரும்பிக் காதல் கொள்ளாத நிலையில் அவரால் எனக்கு என்ன இன்பம் கிடைக்கப் போகிறது?
1196. ஒருதலையான் இன்னாது காமங்காப் போ
இருதலை யானும் இனிது
கலைஞர் குறல் விளக்கம் – காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும் ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்.
1197. பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்
கலைஞர் குறல் விளக்கம் – காமன், ஒரு பக்கமாக மட்டும் இருப்பதால், என்னைக் காதல் நோய் வருத்துவதையும் என் மேனியில் பசலை படர்வதையும், கண்டு கொள்ளமாட்டான் போலும்!
1198. வீழ்வாாின் இன்சொல் பெறாஅ துலகத்து
வாழ்வாாின் வன்கணார் இல்
கலைஞர் குறல் விளக்கம் – பிரிந்து சென்ற காதலரிடமிருந்து ஓர் இனிய சொல்கூட வராத நிலையில் உலகில் வாழ்கின்றவரைப் போல் கல் நெஞ்சம் உடையவர் யாரும் இருக்க முடியாது.
1199. நசைஇயாா் நல்காா் எனினும் அவா்மாட்
டிசையும் இனிய செவிக்கு.
கலைஞர் குறல் விளக்கம் – என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்.
1200. உறாஅா்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
கலைஞர் குறல் விளக்கம் – நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.