spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'மார்ஷல்' படம் பற்றி பேசிய கல்யாணி பிரியதர்ஷன்!

‘மார்ஷல்’ படம் பற்றி பேசிய கல்யாணி பிரியதர்ஷன்!

-

- Advertisement -

நடிகை கல்யாணி பிரியதர்ஷன், மார்ஷல் படம் பற்றி பேசி உள்ளார்.'மார்ஷல்' படம் பற்றி பேசிய கல்யாணி பிரியதர்ஷன்!

நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர். அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல முன்னனி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி பெயரையும் புகழையும் பெற்று வருகிறார். தமிழில் இவர், சிம்புவின் ‘மாநாடு’, சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர், ஜெயம் ரவியுடன் இணைந்து ‘ஜீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கார்த்தியின் ‘மார்ஷல்’ படத்திலும் கதாநாயகியாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இயக்குனர் தமிழ் இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 'மார்ஷல்' படம் பற்றி பேசிய கல்யாணி பிரியதர்ஷன்!இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர்,”தற்போது என்னுடைய முழு கவனமும் கார்த்தி சாருடனான ‘மார்ஷல்’ படத்தின் மீதுதான் இருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட மூன்று முதல் நான்கு மாதங்கள் எடுக்கும். நான் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே பணியாற்ற விரும்புகிறேன். ரவியின் ‘ஜீனி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ