spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசந்திரமுகி 3-ம் பாகம் கண்டிப்பா வரும்... அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

சந்திரமுகி 3-ம் பாகம் கண்டிப்பா வரும்… அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்!

-

- Advertisement -

சந்திரமுகி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா கடந்த 2005-ஆம் ஆண்டு நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி’ திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி இமாலய வெற்றி பெற்றது.

we-r-hiring

இந்நிலையில் படம் வெளியாகி 17 ஆண்டுகள் கழித்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

பி வாசு இந்தப் படத்தை இயக்குகிறார். வேட்டையன் மற்றும் சந்திரமுகி இடையேயான கதைக்களத்தை கொண்டு இந்தப் பாகம் உருவாகி வருகிறது. நடிகை கங்கனா ரணாவத் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் வடிவேலு, ராதிகா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.  பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சந்திரமுகி படத்தின் மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ” பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்திற்கு நடிகர்கள் தேர்வு செய்து வருவதாக அறிந்தேன். நானும் அதில் கலந்துகொண்டேன். முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் தொடர்பு இருக்கிறது. முதல் பாகத்தில் வந்த பாம்பு பற்றிய சந்தேகங்கள் மூன்றாம் பாகத்தில் விளக்கப்படும் என்று வாசு கூறினார்” இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

MUST READ