spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுSurprise-ஆக எல்லாமே நடக்கும்…வி.கே.சசிகலா

Surprise-ஆக எல்லாமே நடக்கும்…வி.கே.சசிகலா

-

- Advertisement -

நான் என்ன செய்கிறேன் என பொறுத்திருந்து பாருங்கள். Surprise-ஆக எல்லாமே நடக்கும். அதிமுக அட்சியை மீண்டும் கொண்டு வருவேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளாா்.Surprise-ஆக எல்லாமே நடக்கும்…வி.கே.சசிகலா

மதுரையில் நடைபெற்ற முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்கேற்ற வி.கே. சசிகலா முத்துராமலிங்க தேவருக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னர் செய்தியளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். எம்.ஜி.ஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து வருகிறேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறையாக ஏற்பட்டுள்ள இப்பிரச்னையை நிச்சயம் சரி செய்வேன் என்று கூறினாா்.

we-r-hiring

மேலும், யாரு துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும். அதிமுகவை பொறுத்தவரை இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்சனை. மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும். நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கனவே தொடங்கிவிட்டேன். அதேபோன்று, அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை. அதுவரை பொறுமையாக இருங்கள். என்னை பற்றி சீனியர் லீடர்களுக்கு தெரியும்.

ஜெயலலிதாவை திட்டியவர்களை கூட நாங்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகர்களாவும் ஆக்கி உள்ளோம். என்னுடைய மூவ் தனியாக தான் இருக்கும். ஆனால் அது தனியாக தெரியும். என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளாா்.

அந்த வார்த்தையை கேட்டாலே திமுக பயப்படுகிறது – எடப்பாடி பழனிசாமி..!!

MUST READ