spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப்...

2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டி

-

- Advertisement -

காந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு  2026-ஆம் ஆண்டிற்கான சிறந்த மாஸ்டர் பிளான் ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும், அதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.2026-க்கான மாஸ்டர் பிளான் ரெடி… விரைவில் குட் நியூஸ் அறிவிக்கத் தயாராகும் ‘காந்தாரா’ நாயகன் ரிஷப் ஷெட்டிகாந்தாரா சாப்டர் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, நடிகர்-எழுத்தாளர்-இயக்குநர் ரிஷப் ஷெட்டி இந்திய சினிமாவில் தனித்துவமான உயரத்தை எட்டியுள்ளார். உலகளவில் சுமார் 850 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்த ‘காந்தாரா’, ஒரு வெற்றிப் படம் என்ற எல்லையைத் தாண்டி, இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்ற திரைப்படமாக மாறியது.

இந்த வெற்றியின் மூலம் தற்போதைய தலைமுறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ரிஷப் ஷெட்டிக்கு, பொதுமக்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பெரும் பாராட்டுகள் குவிந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்கான சிறப்பு “மாஸ்டர் பிளான்” ஒன்றை தயாரித்துள்ளதாகவும், அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

2026-ஆம் ஆண்டுக்கான தனது சினிமா திட்டங்களில் முக்கிய மாற்றம் இருப்பதாக ரிஷப் ஷெட்டி வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,“2026-ல் நான் படப்பிடிப்பில் இருப்பேன். ஆனால் இந்த முறை ஒரு நடிகராக மட்டுமே. கேமராவுக்குப் பின்னால் நின்று படம் இயக்கும் திட்டம் இல்லை,” என்று தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, பிரசாந்த் வர்மா இயக்கும் ‘ஜெய் ஹனுமான்’ படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

“2026-ல் எனது புதிய ப்ராஜெக்ட்டுக்கான ஸ்கிரிப்ட் எழுதுதல் மற்றும் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்குவேன். ரசிகர்களுக்காக சிறப்பாக ஒன்றைத் திட்டமிட்டுள்ளேன். அது 2026-ல் பெரிய அறிவிப்பாக வெளிவரும்,” என்று கூறினார்.

இதன் மூலம், ரிஷப் ஷெட்டி தனது சினிமா பயணத்தில் புதிய மற்றும் விறுவிறுப்பான கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026-ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் பிஸியான ஆண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னட சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்கிய ரிஷப் ஷெட்டி, நடிகர் மட்டுமின்றி இயக்குநர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல்துறை திறமை கொண்டவர்.

நடிகராக ‘துக்ளக்’ (2012) படத்தின் மூலம் அறிமுகமானார் ‘உளிதவரு’ (2014) படத்தில் கவனம் பெற்றார் ‘ரிக்கி’ (2016) மூலம் இயக்குநராக அறிமுகமானார். ‘கிரிக் பார்ட்டி’ (2016) சூப்பர்ஹிட்டாகி, ஃபிலிம்பேர் விருதை பெற்றுத் தந்தது ‘பெல் பாட்டம்’, ‘கருட கமன விரிஷப வாகன’, ‘காந்தாரா’ போன்ற படங்கள் அவரது திரைப்பயணத்தில் முக்கியமானவை. குறிப்பாக, ‘காந்தாரா’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது.

ஜெய் ஹனுமான் சத்ரபதி சிவாஜி மகாராஜ் காந்தாரா அத்தியாயம் 2 இந்த படங்கள் 2026 மற்றும் 2027 ஆண்டுகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

41 பேரை கொன்று குவித்த விஜயின் பின்னால் செல்வது ஏன்? – காட்வின் ரூபஸ் புனித சவேரியார் ஆவேசம்

MUST READ