ஈரான்-அமெரிக்க போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கொடி ஏந்தி ‘ஜக் விக்ரம்’ LPG டேக்கர் கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்ததுள்ளது.


கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, இந்தியக் கொடி ஏந்திய திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு (LPG) ஏற்றிச் செல்லும் ‘ஜக் விக்ரம்’ (Jag Vikram) என்ற கப்பல் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்துள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பிறகு, இந்தப் பதற்றமான கடல் பகுதியைக் கடக்கும் முதல் இந்தியக் கப்பல் இதுவாகும்.
மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றத்தைத் தணிக்க, சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பில் இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி ஒரு முக்கியமான பாதையாகும். போர்நிறுத்தத்திற்குப் பிறகு இந்தியக் கப்பல் பாதுகாப்பாக இந்தப் பாதையைக் கடந்தது, பிராந்தியத்தில் வர்த்தகப் போக்குவரத்து மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புவதைக் காட்டுகிறது.
இந்தக் கப்பலின் நகர்வு, சர்வதேச கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்புகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை; முட்டுக்கட்டை போடும் இஸ்ரேல்
