Homeசெய்திகள்கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

-

- Advertisement -

அரசியலில் உணர்ச்சிகளுக்கும், சட்டத்தின் விதிமுறைகளுக்கும் இடையே எழும் மோதல்கள் எப்போதுமே கடுமையான விவாதங்களை உருவாக்குவதுண்டு. அந்த வகையில், அண்மையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்த விவகாரம் தற்போது சட்ட வட்டாரங்களிலும், அரசியல் களத்திலும் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வழக்கறிஞர் அலிம் புகாரி அவர்கள் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

அரசியலமைப்புச் சட்டமும் சம வாய்ப்பும்
ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் அல்லது அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது முறையா என்ற கேள்வி ஒருபுறம் எழுப்பப்பட்டாலும், மறுபுறம் அரசின் அதிகாரப் பிரயோகம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாக வலியுறுத்துவதாக புகாரி சுட்டிக்காட்டுகிறார்.

we-r-hiring

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-வது பிரிவுகளின்படி, குடிமக்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். காலாகாலமாகத் தகுதியின் அடிப்படையில் தேர்வுகள் எழுதி, வேலைக்காகக் காத்திருப்புப் பட்டியலில் (Waiting List) ஆயிரக்கணக்கானோர் வரிசையில் காத்துக்கிடக்கும் சூழலில், திடீரென ஒரு குறிப்பிட்ட விபத்து விவகாரத்தில் மட்டும் தகுந்த விதிகளையும், காத்திருப்போரின் உரிமைகளையும் ஓவர்லுக் செய்துவிட்டு அரசுப் பணி வழங்குவது எந்த வகையிலும் நியாயமாகாது என்பதே நீதிமன்றத்தின் வாதமாக முன்வைக்கப்படுகிறது.

‘ப்ளட் கேட்’ (Floodgate) எச்சரிக்கையும் மறுவாழ்வு நடவடிக்கைகளும்
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் மிகத் தெளிவான ஒரு யதார்த்தத்தைப் பேசுவதாகக் குறிப்பிடும் அலிம் புகாரி, இவ்வாறான தளர்வுகள் வழங்கப்பட்டால், எதிர்காலத்தில் எங்கு எந்த அசாம்பாவிதங்கள் நடந்தாலும், அது மற்றவர்களுக்கும் அரசுப் பணி கோரி நீதிமன்றத்தை நோக்கி ஓடக்கூடிய ஒரு பெரிய ‘ப்ளட் கேட்’ (Floodgate) கதவைத் திறந்துவிடும் அபாயத்தை உருவாக்கும் என்றார்.

கரூர் விபத்து நிவாரணம்: அரசுப் பணி வழங்குவது சட்டப்பூர்வமாகச் சாத்தியமா? — ஓர் அலசல்!

இதற்கு மாற்றாக, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரடி அரசுப் பணி வழங்குவதற்குப் பதிலாக, அவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் (Skill Development) அளித்து, அவர்களைச் சுயதொழில் செய்பவர்களாகவோ அல்லது அடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில்முனைவோர்களாகவோ (Entrepreneurs) மாற்றுவதற்கான வழிவகைகளை அரசு ஆராய்ந்திருக்கலாம் என்ற மாற்று யோசனையையும் நீதிமன்றம் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். அரசு வேலை என்பது அரோகரா சொல்லித் தூக்கி எறியப்படும் எளிய விஷயம் அல்ல; அது கடுமையாக உழைத்து, வியர்சி சிந்திப் பெறப்பட வேண்டிய ஒன்று என்பதன் மதிப்பைக் கோர்ட் உணர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒப்பீடுகளும் வாதங்களும்: சரியா? தவறா?
இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் வைக்கப்படும் வாதங்களில் சில வரலாற்று நிகழ்வுகளையும், வழக்குகளையும் உதாரணங்களாகக் காட்டுவது பொருத்தமற்றது என்றும் நேர்காணலில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லீலாவதி கொலை வழக்கு அல்லது ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்களுடன் கரூர் விபத்தை ஒப்பிட்டுப் பேசுவது எங்கு போய் முடியும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பொதுமக்களின் அடிப்படை உரிமைக்காகவும், நிலத்தின் நலனுக்காகவும் போராடித் தங்களது உயிரைத் தந்தவர்களையும், எதிர்பாராத விதமாக நேர்ந்த விபத்துகளில் சிக்கித் தப்பியவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பது தவறான முன்னுதாரணம் என்ற வாதம் வைக்கப்படுகிறது.

நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்தாலும், பொதுமக்களின் வரிப்பணத்திலோ அல்லது முறைப்படுத்தப்பட்ட விதிகளையோ மீறி எடுக்கப்படும் முடிவுகள் எப்போதுமே சட்டத்தின் கிடுக்குப்பிடியில் சிக்கித் தோல்வியைத் தழுவவே செய்யும் என்பதே வழக்கறிஞர் அலிம் புகாரியின் கருத்தாக ஒலிக்கிறது. தேர்தல் அரசியல் லாபங்களுக்காகவும், உணர்ச்சிபூர்வமான விவகாரங்களுக்காகவும் சட்ட விதிகளைத் தளர்த்துவது, பல ஆண்டுகளாகத் தகுதியை நம்பி அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் இலட்சக்கணக்கான உண்மையான மாணவர்களின் வயிற்றில் அடிப்பது போன்றது என்ற கடுமையான வாதத்துடன் இந்த விவாதம் நிறைவடைகிறது.

கரூர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு வேலை செல்லாது: தவெக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

MUST READ