Homeசெய்திகள்தமிழ்நாடுஜவுளித் துறைக்கு தவெக அரசின் ஜாக்பாட்: ரூ.10 கோடியில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்! பசுமை...

ஜவுளித் துறைக்கு தவெக அரசின் ஜாக்பாட்: ரூ.10 கோடியில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்! பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு!

-

- Advertisement -

தமிழகச் சட்டப்பேரவையில் 2026-27ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தமிழக நிதி அமைச்சர் மரியா வில்சன் இன்று தாக்கல் செய்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் என்பதால், மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் உற்பத்தித் துறையை மேம்படுத்த பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

ஜவுளித் துறைக்கு தவெக அரசின் ஜாக்பாட்: ரூ.10 கோடியில் திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்! பசுமை ஆடை உற்பத்திக்கு ஊக்குவிப்பு!

we-r-hiring

 

இதில், இந்தியாவின் ‘ஆடை உதிரிபாகத் தலைநகரம்’ (Textile Hub) என்று அழைக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தின் தொழில் கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ உருவாக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்டுள்ளார்.ரூ.10 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம் நவீன கட்டமைப்பு திருப்பூரில் ஆடை உற்பத்தியை சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், ரூ.10 கோடி மதிப்பீட்டில் ‘திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர்’ (Tiruppur Textiles Technology Centre) அமைக்கப்படும்.

ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இமையம் மூலம் ஜவுளித் தொழிலில் நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரக ஆடைகளின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சிகளும், ஆராய்ச்சிகளும் முன்னெடுக்கப்படும். சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை ஆடை உற்பத்தி’

உலகளவில் தற்போது சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பில்லாத ஆடை உற்பத்திக்கு (Eco-friendly & Sustainable Textiles) அதிக வரவேற்பு நிலவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, திருப்பூரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை ஆடை உற்பத்தியை ஊக்குவிக்கத் தேவையான அடிப்படை மற்றும் நவீன கட்டமைப்பு வசதிகள் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு மூலம் மேம்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜவுளித் தொழிலதிபர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

திருப்பூர் ஜவுளித் தொழில் சந்தித்து வரும் சர்வதேச சவால்களை எதிர்கொள்ளவும், ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்தவும் இந்தத் தொழில்நுட்ப மைய அறிவிப்பு பெரும் உறுதுணையாக இருக்கும். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான நெசவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைவார்கள் என்பதால் திருப்பூரில் உள்ள தொழில் துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பனை விவசாயிகளுக்குத் தவெக அரசின் புதிய பாதுகாப்பு: ரூ.16 கோடியில் ‘தமிழ்நாடு பனை மேம்பாட்டுத் கழகம்’ நிறுவல்!

MUST READ