மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரவிருக்கும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட்டு அமோக வெற்றிபெறுவார்கள் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
குதிரை பேரத்தால் அரங்கேறிய ராஜினாமாக்கள் எடப்பாடி பழனிசாமி, ஆளும் தரப்பை நோக்கி நகர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

எந்தவித நியாயமான காரணமும் இன்றி, வெறும் குதிரை பேரத்தின் காரணமாகவே அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் எனச் சாடினார்.
தொண்டர்கள் மத்தியில் உற்சாகம்சுயநல நோக்கத்திற்காகக் கட்சியையும் மக்களையும் ஏமாற்றிவிட்டுச் சென்றவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்ட அவர், இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க களமிறங்கிப் பிரம்மாண்ட வெற்றிபெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிப்பு: மதுராந்தகத்தில் போஸ்டர்கள், பேனர்களை அதிரடியாக அகற்றும் நகராட்சி நிர்வாகம்!
