சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜயின் பேச்சு மற்றும் அவையின் செயல்பாடுகள் தொடர்பாக, வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
அதே நேரத்தில், சர்க்காரியா கமிஷன் குறித்து முதலமைச்சர் பேசிய பேச்சுக்கு திமுக மூத்த தலைவர் துரைமுருகன் மிகக் காரசாரமான பதிலடியைக் கொடுத்துள்ளார்.

“ஜனநாயகத்தின் மாண்பு சிதைக்கப்படுகிறது” – கம்யூனிஸ்ட்டுகள் கொந்தளிப்பு த.வெ.க அரசு அமைவதற்கு வெளியே இருந்து ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPI-M) தலைவர்கள் பேரவையின் தற்போதைய போக்கு குறித்து தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
“மக்கள் சார்ந்த பிரச்சினைகளையும், காவல்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களையும் ஜனநாயகப்பூர்வமாக நடத்தாமல், பழைய கதைகளைப் பேசி நேரத்தை வீணடிப்பதும், எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதும் ஏற்புடையதல்ல.
சட்டமன்றத்தின் மாண்பையும் ஜனநாயக நடைமுறைகளையும் ஆளும்தரப்பு வெளுத்து வாங்கி சீரழித்து வருகிறது என அவர்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.
சர்க்காரியா கமிஷன் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி முதலமைச்சர் விஜய் சர்க்காரியா கமிஷன் மற்றும் பழைய ஊழல் புகார்களைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு திமுக மூத்த தலைவரும் சட்டமன்ற அனுபவம் வாய்ந்தவருமான துரைமுருகன் மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “வரலாறு தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்த பழைய கதைகளை வைத்துக்கொண்டு முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசி வருகிறார்.
சர்க்காரியா கமிஷன் என்ற பேச்சுக்கே சட்டப்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை என முந்தைய நீதிமன்றத் தீர்ப்புகளும், வரலாறும் தெளிவாக நிரூபித்துவிட்டன.
50 வருடத்திற்கு முந்தைய செல்லாத அறிக்கைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது முதலமைச்சரின் அறியாமையையே காட்டுகிறது எனக் கடுமையாகச் சாடினார்.
அரசியல் களத்தில் பரப்பரப்பு ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் கூட்டணி இயக்கங்களே த.வெ.க அரசின் செயல்பாடுகளைக் பகிரங்கமாக விமர்சித்து வருவதும், திமுகவின் மூத்த தலைவர்கள் சட்டப்பேரவையிலும் வெளியிலும் முதலமைச்சரின் பேச்சுக்குத் தொடர் பதிலடி கொடுத்து வருவதும் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
