விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களிலிருந்தும் 5,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


சுமூகமான பயணத்திற்காக தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து இந்த சிறப்பு பேருந்துகள் திட்டமிடப்பட்டுள்ளன.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் விவரங்கள்:
1. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்: கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு:
இன்று: 585 பேருந்துகள்
நாளை: 1,255 பேருந்துகள்
நாளை மறுநாள்: 1,030 பேருந்துகள்
ஞாயிற்றுக்கிழமை: 650 பேருந்துகள்
2. கோயம்பேடு பேருந்து நிலையம்: கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு:
நாளை: 240 பேருந்துகள்
நாளை மறுநாள்: 240 பேருந்துகள்
ஞாயிற்றுக்கிழமை: 105 பேருந்துகள்
3. மாதவரம் பேருந்து நிலையம்: மாதவரத்திலிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு:
நாளை முதல் ஞாயிறு வரை: தினமும் 110 சிறப்பு பேருந்துகள்
4. பிற நகரங்கள்:
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
மறுமார்க்கமாக சென்னை திரும்பும் வசதி:
விடுமுறை முடிந்து பயணிகள் சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக, செப்டம்பர் 15-ஆம் தேதி பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 765 சிறப்பு பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பதிவு நிலவரம்:
தற்போது வரை விடுமுறை நாட்களில் பயணம் செய்ய பெருமளவிலான பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்:
இன்று: 8,666 பயணிகள்
நாளை: 32,171 பயணிகள்
நாளை மறுநாள்: 18,772 பயணிகள்
ஞாயிற்றுக்கிழமை: 11,177 பயணிகள்
திங்கள்கிழமை: 23,740 பயணிகள்
கூட்ட நெரிசலைத் தவிர்க்க பயணிகள் முன்னதாகவே தங்களது பயணங்களை திட்டமிட்டு முன்பதிவு செய்துகொள்ளுமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.
